மருத்துவமனையில் டாக்டர் இல்லாத சம்பவம்.. செவிலியர் பார்த்த பிரசவத்தால் இறந்த குழந்தை!

Published by
Surya

சென்னை, பூந்தமல்லி அடுத்த குமனஞ்சாவடி, கண்டோன்ட்மென்ட் பகுதியை சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவருக்கு நஸ்ரின் என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று மதியம் பிரசவவலியால் துடித்துள்ளார். இவருக்கு பூந்தமல்லியில் உள்ள தாய்-சேய் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்பொழுது அங்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் பணியில் இல்லாதால், அங்குள்ள செவிலியர் ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்து வந்தார். அப்பொழுது அவர் நஸ்ரினுக்கு பெண் குழைந்தை பிறந்துள்ளதாகவும், ஆனால் அது பிறக்கும்போதே இறந்துவிட்டதாக கூறிவந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனையடுத்து, அவர்கள் களைந்து சென்றனர்.

மேலும் நஸ்ரீனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மேல்சிகிச்சைக்காக அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து தமீம் குடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த குழந்தையில் உடலை பிரேத பரிசோதனை செய்யவுள்ளனர்.

Published by
Surya

Recent Posts

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

மகாராஷ்டிராவில் வெடித்த வன்முறை… வீடுகளை விட்டு வெளியே வர தடை!

நாக்பூர் : மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாக்பூரில் அவுரங்கசீப்…

46 minutes ago

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

சென்னை : கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர்.…

50 minutes ago

டாஸ்மாக் விவகாரம் : அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

1 hour ago

பூமியில் சுனிதா வில்லியம்ஸ் எப்போது தரையிறங்குவார்? நேரலையில் பார்ப்பது எப்படி..விவரம் இதோ!

கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…

11 hours ago

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

13 hours ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

14 hours ago