மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்பு …!

Default Image

தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து கட்டைப்பையில் வைத்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த 24 வயதுடைய குணசேகரன் எனும் கட்டிட தொழிலாளியின் மனைவி தான் ராஜலட்சுமி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ராஜலட்சுமி கர்ப்பிணியாக இருந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணி ராஜலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 4 ஆம் தேதி தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் என்னும் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு 5 ஆம் தேதி காலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியிலுள்ள வார்டில் ஒரு பெண் தனது உறவினரை பிரசவத்திற்கு அனுமதித்து இருந்ததாக கூறி ராஜலட்சுமியிடம் பழகி வந்துள்ளார். மேலும் ராஜலட்சுமிக்கு உதவுவது போல நடித்துள்ளார்.  இதனையடுத்து, நேற்று இந்த பெண்மணி குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். இதனை அறிந்த ராஜலட்சுமி பதற்றமடைந்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் ராஜலட்சுமிக்கு உதவியது போல நடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்மணி தான் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்றதை  கண்டறிந்தனர். இதனையடுத்து குழந்தையை மீட்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், கடத்தப்பட்ட பெண் குழந்தை பட்டுக்கோட்டையில் போலீசாரால் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்