குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை கொண்டு ஏறியதை கண்டுகொண்ட பேருந்து நடத்துடனர் குடிப் போதையில் இருந்த ராஜதுரையை திருமங்கலத்தில் இறக்கி விட்டார்.
இதற்கிடையில் குழந்தை தொடர்ந்து அழுதது பசிக்காவோ இல்லை வேறு எந்த காரணத்திற்காக அழுதது என்று எண்ணக்கூடிய நிலையில் கூட இல்லை ராஜதுரை.வீ என்று கத்தி அழுத குழந்தையை சமாளிக்க முடியாமல், சாலையில் நின்று குழந்தை வேணுமா… என்று குழந்தையை கூவி கூவி விற்பனை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த திருமங்கலம் காவல் துறையினர், ராஜதுரையிடம் இருந்து அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு, அவருடைய இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ராஜதுரையை கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ள்னர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…