தர்ம சாஸ்தா சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி மாத பூஜைகளுக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை திறக்கப்பட்டு வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும், கொரோனா வைரஸ் பீதியைத் தொடர்ந்து பக்தர்கள் வர வேண்டாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் ஏற்கனவே பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோல், சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என்று ஏற்கனவே கேரள அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இதேபோல் பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு அறைகள் வழங்கப்பட மாட்டாது. அப்பம், அரவணை கவுண்டர்கள் செயல்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை வெகுமளவு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பீதிய்யால் கடவுளை வணங்க காண முடியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக ஐயப்ப பக்தர்கள் கருதுகின்றனர்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…