மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கிராம சபை தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் இன்று மாலை நடைப்பெறுகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்குவதற்காக, கிராமசபை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் நீதி மய்யம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று (15-08-2021) கிராமசபைக் கூட்டத்தை நடத்த வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மனு கொடுக்கும் நிகழ்வை 02-08-2021 அன்று நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மனுவின் நகல் மாவட்ட நிர்வாகிகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இம்மனுவை 02-08-2021 (திங்கட்கிழமை) அன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டுகிறேன்.
மேலும், 31-07-2021 (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு கிராம சபை விழிப்புணர்வு குறித்த கலந்துரையாடல் கூட்டம் (Zoom Meeting) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நமது கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும்.
இக்கூட்டத்தில் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள், விளக்கங்களை sscom@maiam.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் உள்ளாட்சி வல்லுனர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்று உங்களின் கேள்விகளுக்கு விடையளிப்பார்கள்.
குறிப்பு:
கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருவதற்கு முன்பு கீழ்க்கண்ட “கிராம சபை” பயிற்சி வீடியோக்களைப் பார்த்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…