புதுடில்லியில் நடைபெற்ற 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது.இந்த விழாவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றதற்கான விருது உள்ளிட்ட 3 விருதுகள் வழங்கப்பட்டது.இந்த விருதினை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே ஆகியோர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தொடர்ந்து 5வது முறையாக இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து இந்த விருது கிடைத்திருக்கிறது.
5-வது முறையாக கிடைத்திருப்பது மிகப்பெரிய பெருமை. அதோடு மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனை சென்னை அரசு ராஜீவ்காந்தி .மருத்துவமனை என்ற அடிப்படையில் கூடுதலாக இன்னொரு விருதும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுமதி வழங்கி அவர்களுக்கும் அந்த பயிற்சி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…