சென்னை தாம்பரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் என்பவர், ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோவில் இருந்து திடிரென பிரகாஷ் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆட்டோ, ட்ரைவர் மற்றும் பயணிகள் யாரும் இல்லாமல் சிறிது தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றுள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ சோதனையில் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார் என தெரிவித்தனர். இந்த நிலையில் டிரைவர் இல்லாமல் ஆட்டோ ஓடிய நிகழ்வு, பின்னர் ட்ரைவர் உயிரிழப்பு போன்ற சம்பவங்களால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…