யாரையோ திருப்திபடுத்தக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்-கார்த்தி சிதம்பரம்

Default Image

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு சென்று ப.சிதம்பரத்தை கைது செய்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.முழுக்க முழுக்க யாரையோ திருப்திபடுத்த, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கைது நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் எதையும் சட்டப்படி சந்திப்போம். எனது தந்தை எங்கும் ஓடி ஒளியவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு ஜோடிக்கப்பட்டு எனது தந்தையை கைது செய்துள்ளனர்.20 முறை சம்மன் வந்தது, அத்தனை முறையும் ஆஜராகி உள்ளேன், எந்தவித சம்மனும் கிடப்பில் போடப்படவில்லை என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்