உள்ளாட்சி பதவிகள் ஏலம் : அதிகாரிகள் விசாரணை

Published by
Venu
  • ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி  ஏலம்விடப்பட்டது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 தேதி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு ஏலம்  எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியானது.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறுகையில் ,இந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் மற்றும்  போலீசார் நடுக்குப்பத்தில் உள்ள  கிராம மக்களிடம்  விசாரணை நடத்தினர்.நடுக்குப்பம்  கிராம ஊராட்சி செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

17 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

30 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

55 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

1 hour ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago