உள்ளாட்சி பதவிகள் ஏலம் : அதிகாரிகள் விசாரணை

Default Image
  • ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி  ஏலம்விடப்பட்டது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
  • பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 

தமிழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் நடைபெறுகிறது.இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9 தேதி தொடங்கியது.வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு ஏலம்  எடுக்கப்பட்டது என்று தகவல் வெளியானது.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.இதனையடுத்து மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறுகையில் ,இந்த தகவல் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் பதவிகள் ஏலம்போன தகவல் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதிகாரிகள் மற்றும்  போலீசார் நடுக்குப்பத்தில் உள்ள  கிராம மக்களிடம்  விசாரணை நடத்தினர்.நடுக்குப்பம்  கிராம ஊராட்சி செயலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்