வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… சென்னையில் மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகள் மற்றும் சாலை நிலவரம்..!

Default Image

சென்னையில் வாணிமஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (02.01.2022) சென்னையில் பெய்த மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்.

1.மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:

  •  மெட்லி சுரங்கப்பாதை
  • ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை

2.மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட போக்குவரத்து மெதுவாக செல்கின்றன.

  • கே.கேநகர் -ராஜாமன்னார்சாலை
  •  கே.பி.தாசன்சாலை
  •  திருமலைபிள்ளைசாலை
  • பசூல்லாசாலை

3. மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம்:

வாணிமஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்சன் வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கியுள்ள சுரங்கபாதை மற்றும் சாலைகளில் உள்ள மழைநீரை மோட்டார் பம்ப்செட்கள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் சாலைகளை தேர்த்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack