தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை சேர்ந்த சிவக்குமார், சிவா மற்றும் சின்னத்தம்பி ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன் தினம் மதியம் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். நடுகடலில் இரவு 10 மணியளவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து உள்ளனர்.
பின் மீனவர்களையும் கடுமையாக தாக்கி, மீனவர்களிடம் இருந்த 3 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்துக்கொண்டு தமிழக மீனவர்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து படு காயங்களுடன் தப்பிய தமிழக மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…