சிவகாசி வார இதழ் செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்..!

Default Image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார்.இவர்  வார இதழ் பத்திரிகையில் மாவட்ட செய்தியாக வேலை செய்து வருகிறார்.

இந்த வார வழக்கம்போல நேற்று வெளியானது. அதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் ராஜாவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வருவதாக செய்தி வெளியாகி இருந்த நிலையில் நேற்று கார்த்திக்கை மர்ம நபர்கள்  தாக்கி உள்ளனர்.

படுகாயமடைந்த கார்த்திக் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்திக் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களும், சமூக ஆர்வலர்களும், காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்