ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்.
தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது இந்த கொள்ளைக் கும்பலின் தலைவன் சவுகத் அலியையும் காவலில் எடுத்து விசாரிக்க பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். சவுகத் அளியிடமிருந்து ஏடிஎம் கொள்ளை குறித்த அதிகப்படியான தகவல்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொள்ளை கும்பலுக்கு சவுகத் அலி மற்றும் சஹதப் கான் ஆகியோர் தலைவனாக இருந்ததாகவும், இவர்களுக்குக் கீழ் மற்ற கொள்ளையர்கள் செயல்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கொள்ளை அடித்த பின்பதாக சவுகத் அலி உட்பட 5 கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு காரில் தப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…