ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை 7 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல்.
தமிழகம் முழுவதுமுள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம் மிஷினில் ஒரு கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சவுகத் அலி எனும் இந்த கொள்ளைக் கும்பலின் தலைவனை தவிர மற்ற மூவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது இந்த கொள்ளைக் கும்பலின் தலைவன் சவுகத் அலியையும் காவலில் எடுத்து விசாரிக்க பெரியமேடு போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளனர். சவுகத் அளியிடமிருந்து ஏடிஎம் கொள்ளை குறித்த அதிகப்படியான தகவல்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொள்ளை கும்பலுக்கு சவுகத் அலி மற்றும் சஹதப் கான் ஆகியோர் தலைவனாக இருந்ததாகவும், இவர்களுக்குக் கீழ் மற்ற கொள்ளையர்கள் செயல்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார். மேலும் கொள்ளை அடித்த பின்பதாக சவுகத் அலி உட்பட 5 கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு காரில் தப்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…