அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! தினமும் 3 லாரிகள் அளவிற்கு குப்பைக்கு செல்லும் காலணிகள்!

Published by
மணிகண்டன்

காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர்.

பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்த களைப்பினாலும் பக்தர்கள் தங்கள் காலணிகளை திரும்ப எடுப்பதில்லை.

இதனால் மட்டும் ஒரு நாளைக்கு 3 லாரிகள் அளவிற்கு காலணிகள் சேர்ந்து விடுகிறதாம். இதனை லாரிகள் மூலம் நத்தம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி விடுகின்றனராம். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மழைநீர் விழுந்தால் காலனிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உண்டாகும் எனவும் அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago