அத்திவரதரை காண குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்! தினமும் 3 லாரிகள் அளவிற்கு குப்பைக்கு செல்லும் காலணிகள்!

காஞ்சிபுரம் அத்திவரதரை காண நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு செல்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாவட்ட நிர்வாகம், பக்தர்களை கிழக்கு வாசல் வழியாக உள்ளே அனுப்பி, மேற்கு வாசல் வழியாக வெளியே அனுப்பும்படி பாதை வடிவமைத்து உள்ளனர்.
பக்தர்கள் கிழக்கு வாசல் வழியாக உள்ளே செல்கையில் காலணிகளை அங்கேயே கழட்டி விட்டு சென்று விடுகின்றனர். கிழக்கு வாசலுக்கும் மேற்கு வாசலுக்கும் இடையே சுமார் ஒன்றரை கிமீ இருப்பதாலும், வெகு நேரம் காத்திருந்து தரிசனம் செய்த களைப்பினாலும் பக்தர்கள் தங்கள் காலணிகளை திரும்ப எடுப்பதில்லை.
இதனால் மட்டும் ஒரு நாளைக்கு 3 லாரிகள் அளவிற்கு காலணிகள் சேர்ந்து விடுகிறதாம். இதனை லாரிகள் மூலம் நத்தம்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி விடுகின்றனராம். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், மழைநீர் விழுந்தால் காலனிகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உண்டாகும் எனவும் அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
March 21, 2025
“ஆடையை களைவது பாலியல் வன்கொடுமை அல்ல” அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு.!
March 21, 2025
தேசிய கீதம் இசைக்கும் போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயலால் சர்ச்சை.! வைரலாகும் வீடியோ…
March 21, 2025