10.கீ.மி வேகத்தில்… சென்னையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக்கடல் பகுதியில் நிலைபெற்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மையம் நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

Low pressure zone

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 440கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.

மேலும், கடந்த 7 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல புதுச்சேரியில் இருந்து 460 கி.மீ, நெல்லூரில் இருந்து 530 கி.மீ கிழக்கு தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும்-நெல்லூருக்கும் இடையில் அதாவது சென்னைக்கு அருகில் நாளை (வியாழக்கிழமை) அதிகாலை கரையை கடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 10 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை, புதுச்சேரி அருகாமையில் நகர்ந்து வருவதால் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் காண முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதே போல, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்