திமுக எம்.பி. கனிமொழி , பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது, பாதுகாக்க வேண்டியவர்கள் வேடிக்கை பார்த்தால் பெண்கள் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தன் முகநூலில் எழுதி வெளியிட்ட பதிவில், ”சென்னை கே.கே.நகரில் கல்லூரி வாசலில் மாணவி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் போலீஸார் பைக்கை மிதித்து தள்ளியதில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். தொடர்ந்து பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது.