சென்னை மாணவி அஸ்வினி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு?

Default Image

அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வாங்கி தர வேண்டும் என  சென்னை மாணவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

பி.காம் முதலாமாண்டு சென்னை கே.கே.நகர் மீனாட்சி கல்லூரியில் படித்து வரும் அஸ்வினி நேற்று அழகேசன் என்பவரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். அழகேசனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாணவி அஸ்வினியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். குற்றவாளி அழகேசனுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அஸ்வினிக்கு பாதுகாப்பு அளிக்காத காவல்துறை பதிலளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்