15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி அருகில் மாணவி அஸ்வினியைக் கொலை செய்த அழகேசனை உத்தரவிட்டது.
கே.கே.நகரில் இருக்கும் தனியார் கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த மாணவி அஸ்வினியை, அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் நேற்று கத்தியால் குத்தினார். இதில், படுகாயமடைந்த அஸ்வினி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று தகனம் செய்யப்பட்டது. மாணவி அஸ்வினியைக் கத்தியால் குத்திய அழகேசன் என்ற இளைஞரைப் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் சிலர் தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…