தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

Published by
லீனா

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர். 

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கவுதமனுக்கு லதா என்ற மனைவியும், சார் முகிலன் மற்றும் சார் சித்தார்த்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ஒரு மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர் மருத்துவ செலவிற்காக  பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என்று நினைப்பதாகவும்,  அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவரது மனைவியும் மகன்களும் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் மட்டும் பணி செய்யும் படி கூறியுள்ளனர்.

இந்நிலையில் கௌதமன் பணியில் இருந்தபோது கடன் கொடுத்தவர் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் கௌதமன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்  செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்! 

“எங்களுக்குள் ‘டாக்ஸிக்’ போட்டி இல்லை., நாங்கள் நண்பர்கள்.” கில் ஓபன் டாக்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய…

20 minutes ago

ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய அடி.! சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனுக்கு கேள்வி குறி.?

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும்…

37 minutes ago

“தளபதியை சுத்தி தப்பு நடக்குது., பணம், ஜாதி, ஆனந்த் விஸ்வாசம்.,” த.வெ.க பிரமுகர் பரபரப்பு குற்றசாட்டு?

திருவண்ணாமலை : தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்து தற்போது 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் அரசியல் கட்சி தலைவர்…

1 hour ago

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பொறியாளருக்கு உயர் பொறுப்பு.! யார் இந்த ஆகாஷ் போப்பா?

அமெரிக்கா : டெஸ்லா தலைவர் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத் திறன் துறை (DOGE), தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் மூலம்…

1 hour ago

மகா கும்பமேளாவில் புனித நீராடினார் பிரதமர் மோடி!

பிரயாக்ராஜ் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்று சேரும்…

3 hours ago

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்! த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் பற்றிய முக்கிய அப்டேட்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து…

4 hours ago