தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட எஸ்.ஐ…!

Published by
லீனா

தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட உதவி காவல் ஆய்வாளர். 

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட மேலகோட்டையூர் பகுதியில் உள்ள காவல் குடியிருப்பில் வசித்து வந்தவர் கவுதமன் (59). இவர் விஐபிகளுக்கு பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இதையடுத்து சென்னை நீதிபதி ஒருவருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். பின் இவர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் மாநிலம் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமாருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கவுதமனுக்கு லதா என்ற மனைவியும், சார் முகிலன் மற்றும் சார் சித்தார்த்தன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது ஒரு மகனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் ரத்தம் உறைந்து போகும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இவர் மருத்துவ செலவிற்காக  பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்ததால் கடந்த வாரம் தனது குடும்பத்தினரிடம் விருப்ப ஓய்வு கொடுத்து விடலாம் என்று நினைப்பதாகவும்,  அதில் வரும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் அவரது மனைவியும் மகன்களும் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு வருடம் தான் உள்ளது. எனவே நீங்களே விருப்ப ஓய்வு கொடுத்தால் முழுமையாக வரவேண்டிய பணம் வராது. அதனால் ஒரு வருடம் மட்டும் பணி செய்யும் படி கூறியுள்ளனர்.

இந்நிலையில் கௌதமன் பணியில் இருந்தபோது கடன் கொடுத்தவர் போன் செய்ததாகவும் அதனால் மனமுடைந்த அவர் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் கௌதமன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்  செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

18 mins ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

21 mins ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

52 mins ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

1 hour ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

1 hour ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

3 hours ago