சோதனைக்கு வந்த சோதனை- எஸ்ஐயின் மொபட்,ATM-அபேஸ்! களவானிகள் கைவரிசை

Published by
kavitha

வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளரின்  மொபட்-பைக் எடிஎம் கார்டு போன்றவற்றை திருடி போலீசார்க்கு தண்ணீர் காட்டிய சம்பவம் அரேங்கேறியுள்ளது.

பெரம்பூரில் செம்பியம் போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் பாலமுரளி ஆவார்.இவரும்  காவலர்  ஒருவரும் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வாகன சோதனையின் போது அவ்வழியாக பைக்கில் வந்த  2 பேரை மடக்கி பிடித்த ஆய்வாளர் இருவரும் மது போதையில் தள்ளாடி வந்தது தெரிந்தது.

மதுக்குடித்த அளவினைஉறுதி செய்யும் கருவியை கொண்டு அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். ஆனால் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் 2வரையும் ஓரமாக நிற்கும்படி கூறிய ஆய்வாளர் அவ்வழியே வந்த மேலும் இருவரை மடக்கி பிடித்து பிடிக்க  சென்றனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உதவி ஆய்வாளரின் மொபட் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டும் கருவி, கேமரா ஏடிஎம் கார்டு, பைக்குடன் மர்ம நபர்கள் 2 பேரும் பறந்து விட்டனர்.

போலீசார் இருவரும் திரும்பி வந்த போது  அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆய்வாளர் பாலமுரளி செம்பியம் குற்றப்பிரிவில் புகார் அளித்த நிலையில் மர்ம நபர்கள் 2பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருட்டு நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா இவற்றும் உதவி ஆய்வாளர் கூறிய அடையாளங்கள் கொண்டு குற்றவாளிகளுக்கு வலைவீசி வருகின்றனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடமே இருசக்கர வாகனம் மற்றும் ஆல்கஹால் அளவை காட்டுகின்ற கருவி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி விட்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Published by
kavitha

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

10 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

11 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

12 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

13 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

13 hours ago