அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு !செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Published by
Venu

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மதுரை தல்லாக்குளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில், 2011 முதல் 2013 -ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தனது பதவியை பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.ஆனால் வழக்கில் முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் ராஜேந்திர பாலாஜியின் வருமானம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில்,வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை ,எனவே மேல் விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்தது.

இதன் பின்னர் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக பொதுத்துறை செயலர் வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று தமிழக பொதுத்துறை செயலர்  தரப்பில் சீலிட்ட கவரில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இறுதியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கின் விசாரணை செப்டம்பர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.

Recent Posts

“வதந்திகளை நம்பாதீங்க., அன்று என்ன நடந்தது தெரியுமா?” பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்! 

“வதந்திகளை நம்பாதீங்க., அன்று என்ன நடந்தது தெரியுமா?” பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!

ஹைதிராபாத் : தமிழ், தெலுங்கு சினிமா உலகில் பிரபல பின்னணி பாடகியாக இருக்கும் கல்பனா, கடந்த செவ்வாய் கிழமை அதிகமாக…

9 minutes ago

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

10 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

11 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

12 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

13 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

14 hours ago