மத்திய – மாநில அரசுகளே மாணவர்களை கொலை செய்திருக்கின்றன என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓர் உயிரைக் கூட சாக விடமாட்டோம் என்றார்கள் .கொரோனாவினால் 8 ஆயிரம் பேர் இறந்து விட்டார்கள் லட்சம் பேருக்கு பாதிப்பு – அதிலும் பொய்க்கணக்கு. தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.? அரியலூர் அனிதா, பிரதீபா, மோனிஷா, ரிது ஸ்ரீ வைஷியா, கீர்த்தனா, சுபஸ்ரீ, விக்னேஷ் ஜோதிஸ்ரீ துர்கா, ஆதித்யா, மோதிலால் யார் இவர்கள் .? எப்படி இறந்தார்கள்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து கொலை செய்துள்ளது. இந்தக் கொலைகளுக்கு எடப்பாடி பழனிசாமியே முழுக் காரணம். நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று திமுக தானே குரல் எழுப்பியது. இரண்டு மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பினோமே என்னவாயிற்று அவை, உங்களால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை; சுற்றுச்சூழல் சட்டத்தை எதிர்த்து ஒரு கேள்வி கேட்டதுண்டா.?
இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா ? மாநிலத்துக்கு வர வேண்டிய நிதியைக் கூட பெற முடியாதவர்கள் அமர்ந்திருக்கறீர்கள். தலையாட்டி பொம்மையாக அடிமை ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறீர்கள் இந்த ஆட்சியைத் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…