கஜா புயல் நிவாரணம் கேட்டு மாணவர்களுடன் ஆசிரியரும் சேர்ந்து பொதுமக்களிடம் வசூல் செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
கஜா புயலினால் டெல்டா மாவட்டம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது.மின்சாரம் இல்லாமல் , உணவு இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் டெல்டா பகுதி மக்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்து நிவாரண உதவியானது சென்றுகொண்டு இருக்கிறது. திரைத்துறையை சார்ந்தவர்கள் , அண்டை மாவட்டம் , அண்டை மாநிலம் , அரசியல் கட்சிகள் , மாணவர்கள் , அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் டெல்டா பகுதி மக்களுக்கு நிதிஉதவி , மற்றும் நிவாரணம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகாவில் உள்ள நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட துறை சார்பில் இன்று கஜா புயல் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.நிவாரண பொருட்கள் , நிதி சேகரிப்புக்கு நாகலாபுரம் மனோ கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பேராசிரியர் எஸ்.சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார்.மனோ கல்லூரி முதல்வர் ஜெயசிங் நிவாரண நிதி வசூலை தொடங்கி வைத்தார்.விளாத்திக்குளம் கடை வீதி , பேருந்துநிலையம் , பொது மக்கள் கூடும் இடம் என வீடு வீடாக பல பகுதியில் ஆசிரியரும் , மாணவர்களும் சேர்ந்து நிவாரண நிதி வசூல் நடைபெற்றது.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…