தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ,காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.ஆகவே தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.எனவே தேசிய கட்சியான காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காமல் உள்ளது. இதனிடையே தான் பொங்கல் பண்டிகை முடிந்த பின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மாநிலங்களான கோவை மற்றும் திருப்பூருக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த இரு மாவட்டங்களிலும் தொழில்துறையினருடன் ராகுல்காந்தி பங்கேற்கும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…