ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Published by
மணிகண்டன்

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது.

21 மாநிலங்களில் 102 தொகுதியில் மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது வரை ஒரு சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. தமிழகம் (39) மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதிகளில் காலை 7 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு சரியாக மாலை 6.00 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்கு மேல் வந்தவர்கள் யாரும் வாக்களிக்க வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கைக்கிலாதாங்கல் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் 250 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் 8 மணிக்கு மேலாகியும் வாக்களித்து வந்தனர். அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் தோகைப்பாடி வாக்குச்சாவடியில் மாலை 6 மணிக்கு மேல் 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றுது. இவ்வாறு ஒரு சில இடங்களில் நேரம் கடந்தும் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன.

இதன் காரணமாக, தற்போது வரை துல்லியமான வாக்குப்பதிவு விவரங்கள் வெளியாகவில்லை. இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது என குறிப்பிட்டார்.

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகள் பதிவானதாகவும், அடுத்ததாக தர்மபுரியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியதாகவும், சிதம்பரத்தில் 74.87 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளது .குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 67.82 சதவீத வாக்குகளும், மதுரையில் 68.98 சதவீத வாக்குகளும், வடசென்னை 69.26 சதவீத வாக்குகளும் பதிவாகியதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுவரை, பதிவான வாக்குகள் விவரங்கள் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் மட்டுமே என்றும், தபால் வாக்குகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும். இறுதியாக துல்லிய வாக்குப்பதிவு சதவீதம் நாளை பகல் 12.00 மணி அளவில் வெளியிடப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாலை வாக்குப்பதிவு நிறைவு பெறும் நேரமான 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரத்தில் மட்டும், தமிழகத்தில் 10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும், தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமாக பதிவான வாக்குகள் 72.44 சதவீதம் மட்டுமே. இந்த வருடம் அதனை தாண்டி வாக்குகள் பதிவாகி இருக்கும் என கூறப்படுகிறது. துல்லியமான வாக்கு சதவீதம் தெரியவர நாளை வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

6 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

6 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

7 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

7 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

8 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

9 hours ago