தமிழன் இருக்கும் வரை முதல்வர் ஸ்டாலினின் பெயர் நிலைத்து இருக்கும் – அமைச்சர் துரைமுருகன்

Published by
பாலா கலியமூர்த்தி

மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை என பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மணல் எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செம்மொழியில் தமிழை தவிர வேறு எந்த மொழி உயிரோடு இருக்கிறது? நமது ஊரின் பெருமை நமக்கு தெரியவில்லை. பானை ஓடுகளும், அதில் உள்ள எழுத்துக்களும் நம்மளை காப்பாற்றுகிறது. இன்றைக்கு இருப்போம், நாளைக்கு ஆட்சி போகும். ஆனால், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை உலகெங்கிலும் பரப்பும் முதல்வர் ஸ்டாலினின் பெயர் தமிழன் இருக்கும் வரையில் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், கீழடி தொல்லியல் ஆய்வு மற்றும் தமிழின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொல்லியல் அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த, நெல்லையில் ரூ.15 கோடியில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

14 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

27 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

38 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

45 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

60 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago