மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து.
திருச்செந்தூர் கோயில் ஊழியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பேசிய நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி.
விஐபிக்கள் எனும் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். கோயில்களில் விஐபி தரிசனம் முறையால் சாதாரண பக்தர்கள் சீரமத்துக்குள்ளாகிறார்கள்.
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்செந்தூர் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்களை தூத்துக்குடி எஸ்பி நியமிக்கவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
கோயிலுக்கு வரும் பக்தர்களை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டார் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும் காவல், வருவாய், அறநிலையத்துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்கக்கூடாது, பக்தர்கள் போல நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், பக்தர்களை தகாத வார்த்தைகளால் பேசும் கோயில் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோயிலின் பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை 3 வாரங்களில் நடைமுறைப்படுத்தவும் ஆணையிட்டுள்ளனர்.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…