சென்னை தேனாம்பேட்டையில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் திருவுருவச் சிலையை சேதப்படுத்தியதற்கு கடும் கண்டனம் தெரிசித்து சசிகலா அறிக்கை.
அந்த அறிக்கையில், சென்னை தேனாம்பேட்டையில் நிறுவப்பட்டு இருந்த பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர்அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த இழிசெயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலையை சேதப்படுத்தியவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பகைவருக்கு கூட பாசத்தை காட்டும் எங்கள் புரட்சித்தலைவரின் அப்பழுக்கற்ற முகத்தினை சேதப்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? நீங்கள் கண்டிப்பாக இதயமே இல்லாத ஒரு பிறவியாகத்தான் இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.
எங்கள் பாசத் தலைவருடைய மக்கள்நலத் திட்டங்களால் உங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கூட ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக பயனடைந்தவர்களாகத்தான் இருக்க முடியும். இந்த பாவ செயலுக்கு பிராயச்சித்தமாக நீங்கள் எத்தனை கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் எந்த பரிகாரமும் கிடைக்கப் போவது இல்லை. இது போன்று தலைவர்களின் திருவுருவச் சிலைகளை சேதப்படுத்துவதை விட்டுவிடுங்கள் – ஒரு தாயாக உங்களை கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து திருந்தப்பாருங்கள்.
உங்கள் குடும்பத்தினருக்கு பாவமூட்டைகளை சேர்த்து வைக்காமல், நாலு பேருக்கு உதவிடும் வகையில் நல்ல மனிதர்களாக வாழ முயற்சி செய்யுங்கள்.
திமுக ஆட்சியில் தமிழகமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, தமிழக மக்களை காப்பாற்றிய நம் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதற்கு நான் மிகவும் வேதனை அடைகிறேன். உண்மையான திராவிட சிந்தனை உள்ளவர்கள் திராவிட தலைவர்களின் பெயர்களையும், புகழையும் பேணி பாதுகாத்திட வேண்டுமே தவிர, திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை.
இன்றைக்கும் தெய்வங்களாக நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தபடுவதை தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு அளிக்கின்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும். மேலும், இது போன்று நமது தலைவர்களின் திருவுருவச் சிலைகளை அவமதிப்பவர்கள், சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…