அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம் என ராமநாதபுரம் போலீசார் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் கள்ளர் தெருவை சார்ந்த அருண்பிரகாஷ் (23) அதே பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன்(20). இவர்கள் இரண்டு பேரும் திங்கட்கிழமை மாலை அவர்களது தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்கள் அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்குவந்த மர்ம கும்பல் , அருண்பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரனை தாக்கி உள்ளனர்.
அந்த கும்பலிடம் இருந்து இருவரும் தப்பிடித்து ஓடினர். ஆனால், அந்த கும்பல் அவர்களை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், சிகிக்சை பலனின்றி அருண்பிரகாஷ் உயிரிழந்தார். தற்போது யோகேஸ்வரனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொலை மதரீதியான முன்விரோதம் காரணமாக நடைபெற்றது என பலர் சமூக வலைத்தளங்களில் கூறிவந்த நிலையில், ராமநாதபுரம் போலீசார் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மத சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர் என தெரிவித்தனர்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…