ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெ.ஜெ கட்சி நிறுவன தலைவர் ஜோசப் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் முடித்துவைத்தது. அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.