ஆருத்ரா மோசடி! நடிகர் ஆர்கே சுரேஷ் ரூ.15 கோடி வாங்கியது அம்பலம்.. குற்றப்பத்திரிகையில் தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் சுமார் ரூ.15 கோடி வரை பணம் பெற்றிருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ரூ.5 கோடி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரூ.15 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.15 கோடி பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 500 முகவர்கள் மூலம் ரூ.800 கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடுகளை பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடிகர் ஆர்கே சுரேஸுக்கு சம்மன் அனுப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

மேலும் இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த 20ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் கட்ட குற்றபத்திரிகையை பொருளாதார குற்றப்பிரிவு பிரிவு போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

52 minutes ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

1 hour ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

3 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

4 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

4 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

5 hours ago