ஆருத்ரா மோசடி வழக்கு – நாளை 3000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஆருத்ரா மோசடி தொடர்பான வழக்கில் ஆவணங்கள், ஆதாரங்கள் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்.

ரூ.2,438 கோடி ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி தொடர்பான வழக்கில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆருத்ரா மோசடி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நாளை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடுகளை பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அடிப்படையில் இதுவரை 61 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

22 கார்கள், வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வைப்புத்தொகை மற்றும் ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரிஷ் உள்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்கள் நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆருத்ரா மோசடி தொடர்பான வழக்கில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

15 minutes ago

கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…

20 minutes ago

மதுரை சித்திரை திருவிழா: அன்னதானம் வழங்க விதிமுறைகள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…

32 minutes ago

பாஜக உருட்டி மிரட்டி அதிமுக கூட கூட்டணி வைத்திருக்கிறது! செல்வப்பெருந்தகை பேச்சு!

சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…

1 hour ago

என்னால முடியல..பாதியிலே கிளம்பிய சஞ்சு சாம்சன்! அடுத்த போட்டியில் விளையாடுவாரா?

டெல்லி :  ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…

3 hours ago

சிம்பு படமா? அப்போ 13 கோடி கொடுங்க…தயாரிப்பாளரிடம் கண்டிஷன் போட்ட சந்தானம்!

சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…

4 hours ago