கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கலைஞரை புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் கலைஞர் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், 99 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் என்ற ஒருவர் பிறந்திருக்கவிட்டால், தமிழகத்தின் முகம் இப்படி பொலிவு பெற்றிருக்காது. சமுதாயம் இப்படி ஏற்றம் பெற்றிருக்காது. உயிரோடு இல்லாதவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது கிடையாது. ஆனால் உயிரோடு இல்லாதவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கலாம். எனவே, கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…