நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் – ராகுல் காந்தி!

Published by
Rebekal

நவீன தமிழகத்தை வடிவமைப்பதில் கலைஞர் மு. கருணாநிதி மகத்தான பங்களிப்பு கொண்டிருந்தார் என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் மூன்றாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் மறைந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்களும் இது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் உங்கள் தந்தை தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நினைவு நாளில், நவீனத்துவத்தை வடிவமைத்தில் அவரது மகத்தான பங்களிப்பை நான் கௌரவிக்க விரும்புகின்றேன் எனவும், கலைஞர் கருணாநிதி அவர்கள் சமூக புரட்சியின் முக்கிய கலைஞர்களில் ஒருவர் மட்டுமல்லாமல், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நமது கூட்டாட்சி அரசியல் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் பெறுவதற்கு போராடியவர். இவர் அமைத்த அடித்தளம் தான் மக்கள் தங்கள் துணை கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதற்கு தொடர்ந்து ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் தந்தையின் வீரமிக்க வாழ்க்கை போராட்டம் ஒரு வலிமையைக் கொடுக்கிறது எனவும், அவர் நமக்கு வழிகாட்டியாக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

rahulgandhi

Published by
Rebekal

Recent Posts

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்! அதிமுக புறக்கணிப்பு…

சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…

28 minutes ago

தோனியின் ஆவேசம் வீண்.. 4வது முறையாக தொடர் தோல்வி.! சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி..,

பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…

59 minutes ago

காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார்.! யார் இந்த குமரி அனந்தன்?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…

2 hours ago

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

10 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

11 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

12 hours ago