இயற்கைக்கு மாறாக செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தனியார் ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் செயற்கை நீர்வீழ்ச்சி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்கிற புகாரின் அடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவித்துள்ளது .
அதில், இயற்கையான அருவி நீரோட்டத்தை மாற்றி செயற்கையாக நீர்வீழ்ச்சியை உருவாக்குவது சட்டவிரோதமானது. வணிக நோக்கத்துடன் இவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்குவது தவறானது என குற்றம் சாட்டினர்.
மேலும், இவ்வாறு இருக்கும் செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, கோவை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவானது, குறிப்பிட்ட மாவட்டங்களில் செயல்படும் தனியார் ரெசார்ட்களில் ஆய்வு செய்து அவ்வாறு செயற்கை நீர்வீழ்ச்சி போன்ற சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அந்த ரெசார்ட்டிற்கு சீல் வைக்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…