சென்னை : சென்னையில் அரசு கலைத்துறை சார்பில் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை நாளை முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஓவியம் மற்றும் கலை வல்லுனர்களின் படைப்புகள் ஆகியவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பில், கலை பண்பாட்டுத் துறை மற்றும் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி சார்பில் தமிழக ஓவியச் சிற்பக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதரம் மேம்படும் வகையில் “சென்னையில் ஓவியச் சந்தை” நடைபெற உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 3) முதல் ஆகஸ்ட் 5 வரையில் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த ஓவியச் சந்தையில் தமிழகத்தைச் சார்ந்த கலை வல்லுநர்களின் ஓவியம் மற்றும் சிற்பக் கலைப் படைப்புகள் விற்பனைக்காக 100 அரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இந்த “ஓவியச் சந்தையை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நாளை (ஆகஸ்ட் 3) காலை 11 மணியளவில் துவங்கி வைக்க உள்ளார். சென்னையில் முதன்முறையாக மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ஓவியச் சந்தையை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுக்கு விருப்பமான கலைப் படைப்புகளை வாங்கிச் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…