சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்வது சரி இல்லை – சீமான்

Default Image

மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது  என சீமான் பேட்டி. 

சி.பா.ஆதித்தனாரில் பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியப் பின் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், காந்தி பொதுவானவர் என்றால் ஆர்எஸ்எஸ் சாவர்க்கரை எதற்கு கொண்டாடுகிறது. இந்தியாவின் அடையாளம் காந்தியும், அம்பேத்கரும் தான்; காந்தியை சுட்டதற்கு தடை செய்யப்பட்டிருந்த ஆர்எஸ்எஸ்-ஐ தடையிலிருந்து நீக்கியதால் வல்லபாய் படேலுக்கு சிலை வைத்தார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும், மதத்தை பெரிதாக கொண்டால் நாடு சுக்கு சுக்காக போவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்பேத்கர் சொன்னார்; சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்வது சரி இல்லை. அது தவறாகிவிடும். நான் எச்சரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்