விடுமுறை நாளில் கைதா? – ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Published by
Edison

கடந்த 2020 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும்,மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 19 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு:

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு:

அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏபிவிபி முன்னாள் நிர்வாகி சுப்பையாவை மார்ச் 31ம் தேதி வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைவர் பதவியில் இருந்து நீக்கம்:

இதனிடையே,கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டார்.தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ஜாமீன்:

இந்நிலையில்,இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏபிவிபி-யின் முன்னாள் தேசியத் தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

மருத்துவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கூறியதாவது: “மனுதாரர் சட்ட உதவி பெறுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் பொது விடுமுறை நாளில் தேவையில்லாமல் அவரை காவலர்கள் கைது செய்வது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.எனவே,இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறது.

நீதிமன்றம் கண்டனம்:

ஆந்திரா உயர்நீதிமன்றம்,குஜராத் உயர்நீதிமன்றம்,ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஆகியவை இதுபோன்ற வழக்குகளை இவ்வாறே கையாண்டு,பொது விடுமுறை நாளில் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன”,என்று கூறினார்.இதனையடுத்து,அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய மார்ச் 23 ஆம் தேதிக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

5 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

7 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

9 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

9 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

10 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

11 hours ago