வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது- அமைச்சர் பாண்டியராஜன்

- குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை எதிர்த்து கோலம் போட்ட மாணவிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில்,கோலம் மூலம் கூறப்பட்ட கருத்து வன்முறையைத் தூண்டுவது போல் இருந்தததால் கைது செய்யப்பட்டிருக்கலாம் . கோலம் மூலம் கூறிய கருத்து அலங்கோலமாக இருந்தால் கைது செய்ய வேண்டியது வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.