கைதி சிறை சாலையா..? இல்லை சொகுசு விடுதியா”..??அதிகாரி அலட்சியமா..!அனுமதியோடு அரங்கேறியதா..???

Published by
kavitha

புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில” கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை “வாழ்ந்தது தெரியவந்தது.இந்த சிறைகளில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

Image result for BED

இந்நிலையில் சிறைத்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த “டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்ததுள்ளனர்”. சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும் “சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கிறது காவல்துறை.

இதனிடையே இன்று  சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருவதாகவும் தெரிவித்த காவல்துறைக்கு தெரியாத சிறைச்சாலையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை..!!சிறைக்குள் சொகுசு அனுபவித்த கைதிகளை பற்றி மக்களுக்கு தெரிந்தவுடன் சோதனை என்று 3 மத்திய சிறைக்கு கிளம்பிய காவல்துறை சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு பொருட்களை எப்படி அனுமதித்தது.சிறைச்சாலை என்பது செய்த குற்றத்திற்க்கான தண்டனையை அனுபவித்து அக்குற்றத் தவறிலிருந்து மனம் திருந்தி வாழவைப்பதாகும்.

ஆனால் தமிழக சிறைச்சாலையில் குற்றத்தை திருத்தி கொள்ள வாய்ப்பே இல்லாத சூழ்நிலையை கைதிகளுக்கு உருவாக்கியுள்ளது.

சிறை என்றால் ஒருவிதமான பயம் தோன்றும் எல்லோருக்கும் ஆனால் இன்று சிறைச்சாலை தானோ அங்கே  மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்கிலாம் என்று குற்றாவளிகள் கூறும் அளவிற்கு தமிழக சிறைகளின் அவலநிலைக்கு இதற்கு யார் காரணம் அலட்சிய அதிகாரிகளா..??அல்லது கைதிகளின் இந்த சொகுசு வாழ்க்கை அதிகாரிகளின் அனுமதியோடு அரங்கேறியுள்ளதா..??என்று மக்கள் காவல்துறையை கேள்வி என்னும்” சாட்டையால்” அடிக்கின்றனர். சாட்டையடிக்கு பதில் அளிக்குமா காவல்..??

 

DINASUVADU

 

Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago