செங்கோட்டையில் பிரதமர் கொடியை ஏற்றும் போது வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நாளை சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா போதுதான் இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான போர் விமானங்கள், இராணுவத்திற்கு சொந்தமான டாங்குகள் அணிவகுத்து செல்வார்கள்.
சுதந்திர தின விழாவை பொறுத்தவரை பிரதமர் மோடி உரையாற்றுவார், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் இந்த முறை இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும்போது வானில் இருந்தபடி மலர்களை தூவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சுதந்திர தின விழாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பட்டு செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…