மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்துள்ளனர். பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது என கூறப்படுகிறது.
குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிகிறது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால், இதுவரை 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். விபத்து நடத்த இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் தான் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்கவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக தெரிவிக்க உள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் சிக்கிய நிலையில் அவரது நிலையைப் பற்றி அமைச்சர்கள் தெரிவிக்கவாய்ப்புள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…
திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் படித்து…