பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார் ரஜினிகாந்த்.
நான் அரசியலுக்கு விரைவில் வருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து அறிவித்துக்கொண்டே வந்த நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம்… நிகழும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ரஜினி ஜனவரியில் கட்சி ஆரமிப்பார் என அந்த பதிவில் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிவரும் அவர், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது எனவும், கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லையென தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, தான் ஆரமிக்கும் கட்சிக்கு பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தியை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியணை அறிவித்துள்ளார்.
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…