அரியலூர் பட்டாசு ஆலை தீ விபத்து.! பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் முதற்கட்டமாக 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.  இதில் தீ காயமடைந்த பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது வரை பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். அதில் 3 பேர் பெண்கள் எனவும் , ஒருவரது உடல் பாகங்கள் சிதறி கிடப்பதால், அந்த உடல் ஆணா பெண்ணா என தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பளார் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சுமார் 3 மணிநேரமாக தீ விபத்து பட்டாசு ஆலையில் நீடித்துள்ளது. அதனை அணைக்க தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் 9 இரு சக்கர வாகனங்கள், ஒரு டிராக்டர், ஒரு சரக்கு வாகனம் ஆகியவை முற்றிலும் சேதமடைந்து விட்டது.

படுகாயமடைந்தோர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக 5 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையின் உரிமையாளர் ராஜேந்திரனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago