நகர்ப்புறங்களில் ஏரியா சபை,வார்டு கமிட்டி – தமிழக அரசின் அறிவிப்புக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு!

Default Image

தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏரியா சபை,வார்டு கமிட்டி ஆகியவை அமைப்பதற்கான விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்படும்.இதற்கு தலைவராக அப்பகுதி வார்டு கவுன்சிலர் இருப்பார் எனவும்,3 மாதத்திற்கு ஒரு முறை வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல,மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு ஏரியா சபைகள் அமைக்கப்பட்டு,3 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஏரியா சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,ஏரியா சபை,வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:”கிராம சபைகளைப் போலவே,நகர்ப்புற மக்கள் பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வழிகோலும் ஏரியா சபை, வார்டு கமிட்டிகளை அமைப்பதற்கான சட்டம் 2010-இல் கொண்டுவரப்பட்டது.இவற்றை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு வகுக்காததால் இந்தச் சட்டம் 12 ஆண்டுகளாகச் செயல்பாட்டுக்கு வராமல் இருந்தது.

அதன்பின்னர்,இதற்கான விதிகளை வகுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரலெழுப்பிவந்தது.நான் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து இது குறித்து வலியுறுத்தினேன். ஏரியா சபைகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என மார்ச் மாதம் தமிழக முதல்வர் அறிவித்தார்.

தற்போது ஏரியா சபை,வார்டு கமிட்டி அமைப்பதற்கான விதிமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதை மநீம வரவேற்கிறது.இவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதைத் தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதி செய்யும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் மநீமவின் பணிகள் தொடரும்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்