Manipur video seeman [Image- bbc]
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாக்கு கேட்கிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் சந்திப்பில் பேசிய சீமான், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால், காவிரியில் தண்ணீர் தாராவிடில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று கூறியிருப்பார். ஆனால், தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் வாக்கு கேட்கிறார். எனவே, திமுக கூட்ணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றினால், திமுக கூட்டணியில் நாம் கட்சி சேர தயார் என சீமான் கூறியதாகவும், கூறப்படுகிறது.
இதையடுத்து பேசிய அவர், 18 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டினார். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழலை பற்றி பேசுகிறாரே, தவிர அதிமுகவின் ஊழலை பற்றி ஏன் பேசுவதில்லை. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், அந்த கட்சி புனித கட்சி ஆகிவிட்டதா?, கோடநாடு கொலை வழக்கை பற்றி அண்ணாமலை ஏன் பேசுவதில்லை. நேர்மையானவர் என்றால் அனைத்து தவறுகள் பற்றியும் பேச வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…