தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் – விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்

Default Image

களிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் உறுதி.

தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் சமூக வலைதளங்களில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத் தொகை உள்ளிட்ட அரசின் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்ற தகவல் வைரலானது.

இதனையடுத்து விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்கள், மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் சாதனை படைத்த மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
INDvPAK ICC CT 2025
US President Donald Trump - Elon musk
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal