ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகள் நியமனம் -தமிழக டிஜிபி

Default Image

 விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக  ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில்  அத்தியாவசியப் பொருள்களை கொண்டு செல்வதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை.இருந்தாலும் போலீசார் வாகன சோதனையின்போது  பல இடங்களில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனா். சில இடங்களில் விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்வதாக புகாா் தெரிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் விவசாய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிரமத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகாரிகளை  நியமனம் செய்துள்ளார் தமிழக டிஜிபி திரிபாதி. வடக்கு, தெற்கு, மத்திய, மேற்கு மண்டலங்களாக பிரித்து அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்